Thursday, December 27, 2007

புத்தாண்டு வாழ்த்து !


புத்தாண்டு பொங்கல்
நன்நாளாம் இந்நாளில்
புணைகிறேன் நானே
புதுக்கவிதை ஒன்று !

எத்திக்கும் புகழ்மனக்கும்
எம்தமிழ் நாட்டினிலே
தித்திக்கும் தேன் தமிழை
பேசிவரும் நேயர்களே !

இப்புவியில் நீவீர்
ஈராயிரம் ஆண்டுகள்
இனிதே வாழ்வுநடத்த
இயம்புகிறேன் நானே !

எனதன்பு உம்மை
என்றைக்கும் இழக்காது
உமதன்பு எனக்கு
ஒருநாளும் மறக்காது !

என்மீது நீர்கொண்ட
அன்புஒரு சொம்பு
உம்மீது நான்கொண்ட
பாசமது ஆகாசம் !

இப்பிறவியில் யான்பெற்ற
இவ்வினிய இன்பம்
எப்பிறவியிலும் யான்பெற
என்னசெய்ய வேண்டுமோ !

இன்று நீர்காணும்
இனிய கணவுகள்
என்றும் நிலைத்திருக்க
எல்லாம்வல்ல இறைவன் !

என்றும் துணைநின்று
ஏற்றம் அளிக்க வேண்டி
இறைநிலையிலே வாழ்த்துகிறேன்
வாழ்கவளமுடன்! வாழ்கவளமுடன்!!

இவண்

கவி.செங்குட்டுவன்
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109

Friday, December 21, 2007

இயேசு அவதாரத் திருநாள் வாழ்த்துக்கள்!

அண்ணல் இயேசு அவதரித்த
அற்புதத் திருநாளாம் இன்று
அகில உலக மக்களெல்லாம்
அன்புகொள்ளும் பெருநாளாம் இன்று !

ஆட்டிடையன் அன்பையும் கூட
ஆனந்தத் தோடே ஏற்றிட்ட
ஆன்மபல மிக்கோன் எங்கள்
ஆயர்குல ஒளிவிளக்கு இயேசு !

இன்றைய உலகமதில் உள்ளயாவரும்
இன்பமுடன் வாழ்ந்திடவே ந்ல்ல
இன்னமுதத் தோத்திரங்களை எங்களுக்கு
இனிமையாகத் தந்தவர் இயேசு !

ஈரமான நெஞ்சுடனே என்றும்
ஈகைத் தன்மையதனைக் கொண்டே
ஈனமான மனதைக் கொண்டோரையும்
ஈன்றதாய் போல்காப்பவர் இயேசு !

உலக உத்தமர் வரிசையதில்
உயர்ந்த இடமும் பெற்றிட்டே
உள்ளும் புறமும் அனைவரிடமும்
உண்மையை விரும்பிடும் இயேசு !

ஊக்கத் தோடே யார்வந்து
ஊழியம் செய்திட விரும்பினாலும்
ஊருக்காக உழைத்திட வேண்டி
ஊதல்ஊதியே அழைப்பவர் இயேசு !

எங்கும் நிறைந்த பேரொளியாய்
எவர்க்கும் உதவிடும் பருவமழையாய்
எப்போதும் மக்களைக் காத்திடும்
எங்கள் அண்ணலே இயேசு !

ஏற்றம் ஒன்றே குறிக்கோளாய்
ஏணிப்படியே வாழ்வின் துவக்கமாய்
ஏற்றுக் கொள்ளும் யாவரையும்
என்றும் காப்பவர் இயேசு !

இவண்
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109

Sunday, December 9, 2007

காத்திருப்பு

காலமெல்லாம்
காத்திருந்தான்
அவன் !

கற்போடு
பூத்திருந்தாள்
அவள் !

இனையும்
நாள்தான்
இறுதிவரையில்
கிட்டவே இல்லை !.
பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டுக் கொருபு லவன்பா ரதியே
நீவீட் டுக்கொரு சாரதி யாமோ!

பாரத நாடதன் பாண்மை தனையே
பார்போற்றவே நீயும் பாடி மகிழ்ந்தாய்!

தமிழ்நா டதன்த னித்தன்மை தனையே
தரணியில் நிலைக்கச் செய்யவே உழைத்தாய்!

தங்கத் தமிழர் வாழ்வே நாளும்
தலைமை பெறச்செய்ய வேண்டியே பாடுபட்டாய்!

சுதந்திர கீதமதை இசைத்த நீயும்
சுகமதை காணத் துடித்து வந்தாய்!

தேசிய இயக்கப் பாடல் மூலமே
தேசமதை காக்கவே நீயும் முயன்றாய்!

தோத்திரப் பாடல் ஞானப் பாடல்மூலமே
தெய்வ பக்திமானாகவே காட்சி அளித்தாய்!

சமூக மதில்மார் றம்காணவே நீயும்
சீர்திருத் தப்பாடல் பலவும் தந்தாய்!

கண்ணன் குயில்பா டல்மூலமே நீயும்
காதல் கதையும் குழந்தைக் கதையும்

கலந்தெமக்கு கனிவோடு கொடுத்து நல்ல
கானமென பாடியே மகிழச் செய்தாய்!

பாஞ்சாலி சபதப் பாத்திரம் மூலமே
மகாபா ரதக்கதையை எமக்கு அளித்தாய்!

புரட்சிக்கு இலக்கணம் கற்பித்த நல்ல
புரட்சி வீரராம் பாரதியே வாழ்கநீ!

கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி: 9842712109

Sunday, November 25, 2007

திருக்கார்த்திகை.

அண்ணாமலைக்கு அரோகரா எனச்சொல்லி
அரூபக் கடவுளை வணங்கியே
அகிலம் முழுதும் நிறைந்திருக்கும்
அளவில்லா இருளைப் போக்கிடவே
அனைவராலும் தீபமேற்றி வழிபடும்
அற்புதத் திருநாளே திருக்கார்த்திகை.

கவி.செங்குட்டுவன்
அலைபேசி : 9842712109
ஊத்தங்கரை - 635207

Saturday, November 17, 2007


புதிய ஆத்திச்சூடி
அ - அன்பாய் இரு
ஆ - ஆளுமை பெறு
இ - இன்பம் கொள்
ஈ - ஈகை கடைபிடி
உ - உழைப்பைப் போற்று
ஊ - ஊக்கம் கொள்
எ - எளிமை கடைபிடி
ஏ - ஏற்றம் பெறு
ஐ - ஐயம் தெளிவு
- ஒற்றுமையாய் இரு
ஓ - ஓய்வை பயன்படுத்து
ஔ - ஔவியம் கொள்ளாதே

Posted by கவியின் கவிகள்
at 8:17 AM 0 comments
Monday, November 12, 2007

மக்கள் செழிக்கட்டும்
மக்கள் செழிக்கட்டும்
!"குடியரசு" தான்
நமது வேண்டுதல்
சாராயக் குடி ஆட்சியல்ல !
குடி குடி கெடுக்கும்
குடிப் பழக்கம்உடலைக் கெடுக்கும்
என்ற போதனைபோதையர்க்கு ஏறாது !
குடி கெடுக்கும் கேட்டைஅறிந்த அரசு
குடி வகைகளை ஒழிக்கட்டும்
குடிகள் வாழ்ந்து செழிக்கட்டும் !
Posted by கவியின் கவிகள்
at 1:27 AM 0 comments

தீபாவள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
வளமும் என்றும்நமது நாட்டிலேயே
பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!

கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி : 09842712109
Posted by கவியின் கவிகள்
at 1:09 AM 0 comments
Subscribe to: Posts (Atom)

Tuesday, November 13, 2007

புதிய ஆத்திச்சூடி

- அன்பாய் இரு

- ஆளுமை பெறு

- இன்பம் கொள்

- ஈகை கடைபிடி

- உழைப்பைப் போற்று

- ஊக்கம் கொள்

- எளிமை கடைபிடி

- ஏற்றம் பெறு

- ஐயம் தெளிவு பெறு

- ஒற்றுமையாய் இரு

- ஓய்வை பயன்படுத்து

- ஔவியம் கொள்ளாதே

Monday, November 12, 2007

மக்கள் செழிக்கட்டும்

மக்கள் செழிக்கட்டும் !

"குடியரசு" தான்
நமது வேண்டுதல்
சாராயக் குடி ஆட்சியல்ல !

குடி குடி கெடுக்கும்
குடிப் பழக்கம்
உடலைக் கெடுக்கும்
என்ற போதனை
போதையர்க்கு ஏறாது !

குடி கெடுக்கும் கேட்டை
அறிந்த அரசு
குடி வகைகளை ஒழிக்கட்டும்
குடிகள் வாழ்ந்து செழிக்கட்டும் !

தீபாவள் வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்!
தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்
நலமும் வளமும் என்றும்
நமது நாட்டிலேயே பெற்றிட
நாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!



கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி : 09842712109