Thursday, December 27, 2007

புத்தாண்டு வாழ்த்து !


புத்தாண்டு பொங்கல்
நன்நாளாம் இந்நாளில்
புணைகிறேன் நானே
புதுக்கவிதை ஒன்று !

எத்திக்கும் புகழ்மனக்கும்
எம்தமிழ் நாட்டினிலே
தித்திக்கும் தேன் தமிழை
பேசிவரும் நேயர்களே !

இப்புவியில் நீவீர்
ஈராயிரம் ஆண்டுகள்
இனிதே வாழ்வுநடத்த
இயம்புகிறேன் நானே !

எனதன்பு உம்மை
என்றைக்கும் இழக்காது
உமதன்பு எனக்கு
ஒருநாளும் மறக்காது !

என்மீது நீர்கொண்ட
அன்புஒரு சொம்பு
உம்மீது நான்கொண்ட
பாசமது ஆகாசம் !

இப்பிறவியில் யான்பெற்ற
இவ்வினிய இன்பம்
எப்பிறவியிலும் யான்பெற
என்னசெய்ய வேண்டுமோ !

இன்று நீர்காணும்
இனிய கணவுகள்
என்றும் நிலைத்திருக்க
எல்லாம்வல்ல இறைவன் !

என்றும் துணைநின்று
ஏற்றம் அளிக்க வேண்டி
இறைநிலையிலே வாழ்த்துகிறேன்
வாழ்கவளமுடன்! வாழ்கவளமுடன்!!

இவண்

கவி.செங்குட்டுவன்
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109

No comments: