Sunday, June 26, 2022

அனைவரும் கற்க கல்வி…..


அறியாமை என்னும் அகத்தின் இருளை

தெரியாமை என்னும் புறத்தின் அழுக்கை

புரியாமல் கூட காத்திட வேண்டாம்

வெறியோடு சாய்த்திடுவோம் அரிய கல்வியாலே…..

 

            கல்லாமை இருளை இல்லாமை ஆக்கிடவே

            வெள்ளாமை முழுதையும் விலையாய் கொள்வோம்

            கொல்லாமை நெறியைப் போற்றுதல் போலே

            எள்ளாமை பண்பை என்றும் காப்போம்…..

 

மனிதப் பிறவியின் மகத்துவம் காத்திட

மனிதாபிமானச் செயல்கள் செய்வோம் நாளும்

மக்கள் யாவரும் சகோதர் என்பதை

மனதில் நினைத்தே வாழ்வோம் என்றும்…….

 

            அன்பும் அறமும் அகத்தின் பன்பென

            அனைவரும் அறிந்திட உரைப்போம் என்றும்

            அன்னைத் தமிழின் மொழிகள் யாவும்

            என்னை உயர்த்தும் என்றே சொல்வோம்…..

 

ஊரும் உயர உலகம் தழைக்க

உண்மைத் தன்மையை பேணுவோம் என்றும்

பொய்மை என்னும் பொல்லாத சொல்லை

பொசுக்கியே படிப்போம் அகராதி தன்னிலே….

 

            கல்வி என்னும் ஆயுதம் கொண்டே

            கள்ளி எடுப்போம் அறிவின் ஊற்றை

            சொல்லிச் சொல்லியே சொக்க வைப்போம்

            வெள்ளிச் சலங்கையின் ஓசையைப் போலே…..

ஆர்கலி உலகு....

 


ஆர்கலி உலகத்து மக்கள் எல்லாம்
ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றியே இங்கு
அன்றாட வாழ்வை நடத்தி வந்தால்
அன்பு என்னும் ஊற்று பிறக்குமே...

போட்டி பொறாமை என்னும் பண்பு
வாட்டி வதைக்கும் போதிலே நீயும்
ஈட்டி கொண்டே முன்னேறிச் சென்றால்
வேட்டியும் கூட தங்காது உன்னிடம்....

நல்லோர் நட்பை நாளும் வளர்த்தே
அல்லோர் தொடர்பை அறவே விட்டு
வல்லோர் உறவை வளமாக்கிக் கொண்டால்
சொல்லேர் உழவராய் கோலோச்சலாம் உலகிலே....

கற்றோரும் மற்றோரும் நிறைந்த  உலகில்
உற்றாரும் உறவினரும் சேர்ந்துள்ள உலகில்
ஒற்றுமை என்னும் பேராயுதம் கொண்டே
ஒப்புரவு ஒழுகியே வாழ்வோம் உலகில்.....

Tuesday, March 19, 2019

படைப்பு பரிசுப்போட்டி-கவி. செங்குட்டுவன்

படைப்பு பரிசுப்போட்டி-கவி. செங்குட்டுவன்: அம்மையார் ஹைநூன்பீவி நினைவு பரிசுப்போட்டி

Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்து !



பொங்குக பொங்கல் !

பொங்குகவே பொங்கல் பொங்குகவே
மங்களம் எங்கும் நிறைந்திடவே
மாநிலம் முழுதும் செழித்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தித்திக்கும் கரும்பின் சுவையும்
தெவிட்டாத பொங்கலின் ருசியும்
என்றும் வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

இந்தியசீன நட்புறவின் வளச்சியில்
இணையில்லா தூதர்களாய் செயல்படும்
சீனவானொலி நேயர்களின் வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தங்கத் தமிழாம் எந்தமிழில்
சந்தம் மாறாமல் முழங்கும்
சீனவானொலி தமிழ் பிரிவில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

தரணி புகழும் தமிழின்
தன்மானமிக்க தமிழின் நேயர்களாம்
உங்கள் அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

உலகாளும் உயர்செம் மொழியாம்
எங்கள் தாய்த்தமிழ் மொழிப்பிரிவின் 
பணியாளர்கள் இல்லம் முழுதும்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !

அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், (நே.அ.எண்: 053012)
மாவட்டத் தலைவர்,
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்’
ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே: 04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com

Saturday, January 14, 2012

பொங்கல் வாழ்த்து!


பொங்குகவே பொங்கல் பொங்குகவே

பொங்கலோ பொங்கலென்று பொங்குகவே !



சங்கம் அமைத்து மொழிவளர்த்த

சங்கத்தமிழ் மண்ணில் என்றும்

சாதிமத பேதமின்றி மக்கள்

சமதர்ம வாழ்வு வாழ்ந்திடவே

                                                               (பொங்குகவே)

அனைவர்க்கும் கல்விநாட்டில் கிட்டிடவே

அறிவொளி பெற்றுநாளும் திகழ்ந்திடவே

அறியாமை இருளும் அகன்றிடவே

அறிவுவளம் நாட்டில் ஓங்கிடவே

                                                               (பொங்குகவே)

உலகில் சமாதானம் நிலவிடவே

உயர்வும் தாழ்வும் மறைந்திடவே

உத்தமர் காந்திகள் மீண்டும்

உதித்து இம்மண்ணைக் காத்திடவே

                                                               (பொங்குகவே)

பாட்டாளியும் படிப்பாளியும் சேர்ந்து

பாரதத்தை உயர்த்திடவே என்றும்

பாரபட்சம் நோக்காது நல்ல

பாங்காய் உழைத்து மகிழ்ந்திடவே

                                                               (பொங்குகவே)


அன்புடன்..........


கவி.செங்குட்டுவன்,

ஊத்தங்கரை - 635207.

அலைபேசி: 9842712109 / 9965634541

தொலைபேசி: 04341- 223011 / 223023

மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com


Tuesday, October 25, 2011

தீபாவளி வாழ்த்துக்கள்!



தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்

தீமைகள் யாவும் விலகியே நல்ல

தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட

தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!



எட்டுத் திக்கும் வாழும்

ஏற்றமிகு தமிழர் கூட்டம்

என்றும் நல்வாழ்வு பெற்றிட

எல்லார்க்கும் எல்லாமும் என்றும்

எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே

என்றன் அன்பான வாழ்த்து!



வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே

வகையான வாழ்வு நடத்திட

வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்

வளமான மனமதைப் பெற்றிட

வள்ளல் தன்மையும் கற்றிட

வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!



நாட்டு மக்கள் எல்லாம்நலமும்

வளமும் என்றும்நமது நாட்டிலேயே

பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்

நலமோடும் வளமோடும் காத்திட

ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!



அண்டை அயலார் அனைவரும்

அணுவின் ஆற்றலை நல்ல

ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி

அணுஆயுத பயத்தை விடுத்து

அண்டமதைக் காத்திட எந்தன்

அன்பான தீபாவளி வாழ்த்து!



அன்புடன்..........

கவி.செங்குட்டுவன்,

ஊத்தங்கரை - 635207.

அலைபேசி: 9842712109 / 9965634541

தொலைபேசி: 04341- 223011 / 223023

மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com

வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.

http://kaviyinkural.blogspot.com

http://mazalaiootru.blogspot.com

http://kaviugi.blogspot.com/

http://crcmittapalli.blogspot.com/

Monday, April 12, 2010

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !




மக்களின்மனதில் மாற்றம்தனைக் கொண்டுவரவே


மாற்றங்களின் மூலமே வாழ்க்கையின்


ஏற்றங்களை கற்றுத்தரவே புதிதாய்பிறக்கும்


விக்ருதிஆண்டே வருகநீ ஏற்றம்பல தருகநீ!






கல்லாமை கடன்வறுமை இல்லாமையாகிட


எல்லாமும் வழங்கியே ஏற்றம்தந்திட


நல்லார்மட்டுமே இவ்வுலகில் நடைபயில


நல்லாசிகள் வழங்கிடவே வருகநீ!






அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் அரசாள


அனைவரும் போற்றும் அதிகாரிகள் வழிகாட்ட


அனைத்துலக நாடுகளில் நம்பெருமை நிலைநாட்ட


சித்திரைத் திருநாளே வருகநீ!






கணினிஉலக யுத்தத்தில் எனதினிய


கனித்தமிழும் காலூன்றி கோலோச்ச


கண்ணிமைக்கும் பொழுதினிலே உலகமெலாம்


கற்கண்டு வாழ்த்துகூறவே வருகநீ!





அன்புடன்...............


கவி.செங்குட்டுவன்.


ஊத்தங்கரை - 635207


9842712109 / 9965634541


04341 223011 / 223023


www.pumskottukarampatti.blogspot.com,


rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com