Friday, January 16, 2009

புத்தாண்டு வாழ்த்து !

புத்தாண்டு பிறக்குது
பொழிவாக மலருது !

தித்திக்கும் இந்நாளில்
கவலைகள் மறையுது !

உலகில் சமாதானம்
நிலவப் போகுது !

உயர்குடியும் தாழ்குடியும்
ஒன்றாக இணையுது !

பகலவன் கதிர்கள்
பட்டொளி வீசுது !

பாரெல்லாம் நல்லாட்சி
பகட்டாக நடக்குது !

போட்டி பகை
அச்சம் மறையுது !

நாட்டு மக்களின்
நல்லெண்ணம் நிறைவேறுது !

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை -635207.
அலை பேசி :9842712109

பொங்கல் வாழ்த்து !

பொங்கல் திருநாளாம் இந்நாளில்
பொய்ம்மை மறையும் நன்நாளில்
பொங்கல் வாழ்த்துதனை நானும்
பொறாமையின்றி கூறிட விழைகிறேன் !

நாட்டில் உள்ளோர் அனைவரும்
நாணயமான வாழ்வுதனை நடத்தட்டும்
நல்லோரும் வல்லோரும் இணைந்து
நானில புத்துலகை அமைக்கட்டும் !

உலகில் வாழும் தமிழரெல்லாம்
உயர்ந்த வாழ்வு நடத்தட்டும்
உரிமைக்குரலை நாளும் ஒலித்திடவே
உண்மையாக யாவரும் உழைக்கட்டும் !

தைமகள் வருகையை எல்லோரும்
தவறாமல் எதிர்க்கொண்டு நோக்கட்டும்
தமிழரின் தன்மானம் உலகில்
தனித்தன்மை யோடு திகழட்டும் !

தைத்திங்கள் முதல்நாள் பிறக்கட்டும்
தரணிவாழ் தமிழர்கள் சிறக்கட்டும்
பொங்கல் விழாவதுவும் மலரட்டும்
பொதுமைக் கருத்துக்கள் உலாவரட்டும் !

எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கட்டும்
என்றென்றும் உலகமக்கள் யாவரும்
எல்லா வளமும் பெற்றிட்டே
ஏற்புடனே திகழ்ந்து மகிழட்டும் !

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை -635207.
அலை பேசி :9842712109