புத்தாண்டு வாழ்த்து !
புத்தாண்டு பொங்கல்
நன்நாளாம் இந்நாளில்
புணைகிறேன் நானே
புதுக்கவிதை ஒன்று !
எத்திக்கும் புகழ்மனக்கும்
எம்தமிழ் நாட்டினிலே
தித்திக்கும் தேன் தமிழை
பேசிவரும் நேயர்களே !
இப்புவியில் நீவீர்
ஈராயிரம் ஆண்டுகள்
இனிதே வாழ்வுநடத்த
இயம்புகிறேன் நானே !
எனதன்பு உம்மை
என்றைக்கும் இழக்காது
உமதன்பு எனக்கு
ஒருநாளும் மறக்காது !
என்மீது நீர்கொண்ட
அன்புஒரு சொம்பு
உம்மீது நான்கொண்ட
பாசமது ஆகாசம் !
இப்பிறவியில் யான்பெற்ற
இவ்வினிய இன்பம்
எப்பிறவியிலும் யான்பெற
என்னசெய்ய வேண்டுமோ !
இன்று நீர்காணும்
இனிய கணவுகள்
என்றும் நிலைத்திருக்க
எல்லாம்வல்ல இறைவன் !
என்றும் துணைநின்று
ஏற்றம் அளிக்க வேண்டி
இறைநிலையிலே வாழ்த்துகிறேன்
வாழ்கவளமுடன்! வாழ்கவளமுடன்!!
இவண்
கவி.செங்குட்டுவன்
கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109
Thursday, December 27, 2007
Friday, December 21, 2007
இயேசு அவதாரத் திருநாள் வாழ்த்துக்கள்!
அண்ணல் இயேசு அவதரித்த
அற்புதத் திருநாளாம் இன்று
அகில உலக மக்களெல்லாம்
அன்புகொள்ளும் பெருநாளாம் இன்று !
ஆட்டிடையன் அன்பையும் கூட
ஆனந்தத் தோடே ஏற்றிட்ட
ஆன்மபல மிக்கோன் எங்கள்
ஆயர்குல ஒளிவிளக்கு இயேசு !
இன்றைய உலகமதில் உள்ளயாவரும்
இன்பமுடன் வாழ்ந்திடவே ந்ல்ல
இன்னமுதத் தோத்திரங்களை எங்களுக்கு
இனிமையாகத் தந்தவர் இயேசு !
ஈரமான நெஞ்சுடனே என்றும்
ஈகைத் தன்மையதனைக் கொண்டே
ஈனமான மனதைக் கொண்டோரையும்
ஈன்றதாய் போல்காப்பவர் இயேசு !
உலக உத்தமர் வரிசையதில்
உயர்ந்த இடமும் பெற்றிட்டே
உள்ளும் புறமும் அனைவரிடமும்
உண்மையை விரும்பிடும் இயேசு !
ஊக்கத் தோடே யார்வந்து
ஊழியம் செய்திட விரும்பினாலும்
ஊருக்காக உழைத்திட வேண்டி
ஊதல்ஊதியே அழைப்பவர் இயேசு !
எங்கும் நிறைந்த பேரொளியாய்
எவர்க்கும் உதவிடும் பருவமழையாய்
எப்போதும் மக்களைக் காத்திடும்
எங்கள் அண்ணலே இயேசு !
ஏற்றம் ஒன்றே குறிக்கோளாய்
ஏணிப்படியே வாழ்வின் துவக்கமாய்
ஏற்றுக் கொள்ளும் யாவரையும்
என்றும் காப்பவர் இயேசு !
இவண்
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109
அண்ணல் இயேசு அவதரித்த
அற்புதத் திருநாளாம் இன்று
அகில உலக மக்களெல்லாம்
அன்புகொள்ளும் பெருநாளாம் இன்று !
ஆட்டிடையன் அன்பையும் கூட
ஆனந்தத் தோடே ஏற்றிட்ட
ஆன்மபல மிக்கோன் எங்கள்
ஆயர்குல ஒளிவிளக்கு இயேசு !
இன்றைய உலகமதில் உள்ளயாவரும்
இன்பமுடன் வாழ்ந்திடவே ந்ல்ல
இன்னமுதத் தோத்திரங்களை எங்களுக்கு
இனிமையாகத் தந்தவர் இயேசு !
ஈரமான நெஞ்சுடனே என்றும்
ஈகைத் தன்மையதனைக் கொண்டே
ஈனமான மனதைக் கொண்டோரையும்
ஈன்றதாய் போல்காப்பவர் இயேசு !
உலக உத்தமர் வரிசையதில்
உயர்ந்த இடமும் பெற்றிட்டே
உள்ளும் புறமும் அனைவரிடமும்
உண்மையை விரும்பிடும் இயேசு !
ஊக்கத் தோடே யார்வந்து
ஊழியம் செய்திட விரும்பினாலும்
ஊருக்காக உழைத்திட வேண்டி
ஊதல்ஊதியே அழைப்பவர் இயேசு !
எங்கும் நிறைந்த பேரொளியாய்
எவர்க்கும் உதவிடும் பருவமழையாய்
எப்போதும் மக்களைக் காத்திடும்
எங்கள் அண்ணலே இயேசு !
ஏற்றம் ஒன்றே குறிக்கோளாய்
ஏணிப்படியே வாழ்வின் துவக்கமாய்
ஏற்றுக் கொள்ளும் யாவரையும்
என்றும் காப்பவர் இயேசு !
இவண்
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலை பேசி: 9842712109
Sunday, December 9, 2007
பாட்டுக்கொரு புலவன் பாரதி
பாட்டுக் கொருபு லவன்பா ரதியே
நீவீட் டுக்கொரு சாரதி யாமோ!
பாரத நாடதன் பாண்மை தனையே
பார்போற்றவே நீயும் பாடி மகிழ்ந்தாய்!
தமிழ்நா டதன்த னித்தன்மை தனையே
தரணியில் நிலைக்கச் செய்யவே உழைத்தாய்!
தங்கத் தமிழர் வாழ்வே நாளும்
தலைமை பெறச்செய்ய வேண்டியே பாடுபட்டாய்!
சுதந்திர கீதமதை இசைத்த நீயும்
சுகமதை காணத் துடித்து வந்தாய்!
தேசிய இயக்கப் பாடல் மூலமே
தேசமதை காக்கவே நீயும் முயன்றாய்!
தோத்திரப் பாடல் ஞானப் பாடல்மூலமே
தெய்வ பக்திமானாகவே காட்சி அளித்தாய்!
சமூக மதில்மார் றம்காணவே நீயும்
சீர்திருத் தப்பாடல் பலவும் தந்தாய்!
கண்ணன் குயில்பா டல்மூலமே நீயும்
காதல் கதையும் குழந்தைக் கதையும்
கலந்தெமக்கு கனிவோடு கொடுத்து நல்ல
கானமென பாடியே மகிழச் செய்தாய்!
பாஞ்சாலி சபதப் பாத்திரம் மூலமே
மகாபா ரதக்கதையை எமக்கு அளித்தாய்!
புரட்சிக்கு இலக்கணம் கற்பித்த நல்ல
புரட்சி வீரராம் பாரதியே வாழ்கநீ!
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி: 9842712109
பாட்டுக் கொருபு லவன்பா ரதியே
நீவீட் டுக்கொரு சாரதி யாமோ!
பாரத நாடதன் பாண்மை தனையே
பார்போற்றவே நீயும் பாடி மகிழ்ந்தாய்!
தமிழ்நா டதன்த னித்தன்மை தனையே
தரணியில் நிலைக்கச் செய்யவே உழைத்தாய்!
தங்கத் தமிழர் வாழ்வே நாளும்
தலைமை பெறச்செய்ய வேண்டியே பாடுபட்டாய்!
சுதந்திர கீதமதை இசைத்த நீயும்
சுகமதை காணத் துடித்து வந்தாய்!
தேசிய இயக்கப் பாடல் மூலமே
தேசமதை காக்கவே நீயும் முயன்றாய்!
தோத்திரப் பாடல் ஞானப் பாடல்மூலமே
தெய்வ பக்திமானாகவே காட்சி அளித்தாய்!
சமூக மதில்மார் றம்காணவே நீயும்
சீர்திருத் தப்பாடல் பலவும் தந்தாய்!
கண்ணன் குயில்பா டல்மூலமே நீயும்
காதல் கதையும் குழந்தைக் கதையும்
கலந்தெமக்கு கனிவோடு கொடுத்து நல்ல
கானமென பாடியே மகிழச் செய்தாய்!
பாஞ்சாலி சபதப் பாத்திரம் மூலமே
மகாபா ரதக்கதையை எமக்கு அளித்தாய்!
புரட்சிக்கு இலக்கணம் கற்பித்த நல்ல
புரட்சி வீரராம் பாரதியே வாழ்கநீ!
கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி: 9842712109
Subscribe to:
Posts (Atom)