தீபஒளித் திருநாளாம் இந்நாளில் - உலகில்
தீமைகள் யாவும் விலகியே நல்ல
தித்திக்கும் வாழ்வு அனைவர்க்கும் கிட்டிட
தீஞ்சுவை கலந்த எனதினிய வாழ்த்து!
எட்டுத் திக்கும் வாழும்
ஏற்றமிகு தமிழர் கூட்டம்
என்றும் நல்வாழ்வு பெற்றிட
எல்லார்க்கும் எல்லாமும் என்றும்
எப்போதும் கிடைத்து மகிழ்ந்திடவே
என்றன் அன்பான வாழ்த்து!
வள்ளுவன் வாய்மொழிக் கொப்பவே
வகையான வாழ்வு நடத்திட
வன்னெஞ்சம் கொண்டோ ரெல்லாம்
வளமான மனமதைப் பெற்றிட
வள்ளல் தன்மையும் கற்றிட
வணக்கத்துடன் கூடிய வாழ்த்து!
நாட்டு மக்கள் எல்லாம்நலமும்
வளமும் என்றும்நமது நாட்டிலேயே
பெற்றிடநாட்டு ஒற்றுமையை என்றும்
நலமோடும் வளமோடும் காத்திட
ந்ல்ல உள்ளத்தோடு வாழ்த்து!
அண்டை அயலார் அனைவரும்
அணுவின் ஆற்றலை நல்ல
ஆக்கத் துறைக்கே பயன்படுத்தி
அணுஆயுத பயத்தை விடுத்து
அண்டமதைக் காத்திட எந்தன்
அன்பான தீபாவளி வாழ்த்து!
அன்புடன்..........
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://pumskottukarampatti.blogspot.com.
http://kaviyinkural.blogspot.com
http://mazalaiootru.blogspot.com
http://kaviugi.blogspot.com/
http://crcmittapalli.blogspot.com/