Monday, April 12, 2010

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !




மக்களின்மனதில் மாற்றம்தனைக் கொண்டுவரவே


மாற்றங்களின் மூலமே வாழ்க்கையின்


ஏற்றங்களை கற்றுத்தரவே புதிதாய்பிறக்கும்


விக்ருதிஆண்டே வருகநீ ஏற்றம்பல தருகநீ!






கல்லாமை கடன்வறுமை இல்லாமையாகிட


எல்லாமும் வழங்கியே ஏற்றம்தந்திட


நல்லார்மட்டுமே இவ்வுலகில் நடைபயில


நல்லாசிகள் வழங்கிடவே வருகநீ!






அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் அரசாள


அனைவரும் போற்றும் அதிகாரிகள் வழிகாட்ட


அனைத்துலக நாடுகளில் நம்பெருமை நிலைநாட்ட


சித்திரைத் திருநாளே வருகநீ!






கணினிஉலக யுத்தத்தில் எனதினிய


கனித்தமிழும் காலூன்றி கோலோச்ச


கண்ணிமைக்கும் பொழுதினிலே உலகமெலாம்


கற்கண்டு வாழ்த்துகூறவே வருகநீ!





அன்புடன்...............


கவி.செங்குட்டுவன்.


ஊத்தங்கரை - 635207


9842712109 / 9965634541


04341 223011 / 223023


www.pumskottukarampatti.blogspot.com,


rajendrankavi@yahoo.co.in/kavi.senguttuvan@gmail.com