Sunday, December 9, 2007

பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டுக் கொருபு லவன்பா ரதியே
நீவீட் டுக்கொரு சாரதி யாமோ!

பாரத நாடதன் பாண்மை தனையே
பார்போற்றவே நீயும் பாடி மகிழ்ந்தாய்!

தமிழ்நா டதன்த னித்தன்மை தனையே
தரணியில் நிலைக்கச் செய்யவே உழைத்தாய்!

தங்கத் தமிழர் வாழ்வே நாளும்
தலைமை பெறச்செய்ய வேண்டியே பாடுபட்டாய்!

சுதந்திர கீதமதை இசைத்த நீயும்
சுகமதை காணத் துடித்து வந்தாய்!

தேசிய இயக்கப் பாடல் மூலமே
தேசமதை காக்கவே நீயும் முயன்றாய்!

தோத்திரப் பாடல் ஞானப் பாடல்மூலமே
தெய்வ பக்திமானாகவே காட்சி அளித்தாய்!

சமூக மதில்மார் றம்காணவே நீயும்
சீர்திருத் தப்பாடல் பலவும் தந்தாய்!

கண்ணன் குயில்பா டல்மூலமே நீயும்
காதல் கதையும் குழந்தைக் கதையும்

கலந்தெமக்கு கனிவோடு கொடுத்து நல்ல
கானமென பாடியே மகிழச் செய்தாய்!

பாஞ்சாலி சபதப் பாத்திரம் மூலமே
மகாபா ரதக்கதையை எமக்கு அளித்தாய்!

புரட்சிக்கு இலக்கணம் கற்பித்த நல்ல
புரட்சி வீரராம் பாரதியே வாழ்கநீ!

கவி.செங்குட்டுவன்
ஊத்தங்கரை - 635207
அலைபேசி: 9842712109

No comments: