ஆர்கலி உலகத்து மக்கள் எல்லாம்
ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றியே இங்கு
அன்றாட வாழ்வை நடத்தி வந்தால்
அன்பு என்னும் ஊற்று பிறக்குமே...
போட்டி பொறாமை என்னும் பண்பு
வாட்டி வதைக்கும் போதிலே நீயும்
ஈட்டி கொண்டே முன்னேறிச் சென்றால்
வேட்டியும் கூட தங்காது உன்னிடம்....
நல்லோர் நட்பை நாளும் வளர்த்தே
அல்லோர் தொடர்பை அறவே விட்டு
வல்லோர் உறவை வளமாக்கிக் கொண்டால்
சொல்லேர் உழவராய் கோலோச்சலாம் உலகிலே....
கற்றோரும் மற்றோரும் நிறைந்த உலகில்
உற்றாரும் உறவினரும் சேர்ந்துள்ள உலகில்
ஒற்றுமை என்னும் பேராயுதம் கொண்டே
ஒப்புரவு ஒழுகியே வாழ்வோம் உலகில்.....
No comments:
Post a Comment